ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு.! ஒருவர் கைது.! 

Karuka Vinoth - Raj bhavan Chennai

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கருக்கா வினோத் என்பவர் உடனடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

கருக்கா வினோத் கடந்த வருடம், பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசி சென்றவர் என்பது குறிப்பிடக்கது. அப்போது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் ஒழிப்பு! எங்களுடன் துணை நில்லுங்கள்.. பெருமையை உங்களுக்கே தந்துவிடுகிறோம் – அமைச்சர் உதயநிதி

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் பெரும்பாலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தானாம். யாரேனும் தூண்டுதல் பெயரில் இவ்வாறு பெட்ரோல் குண்டு வீசுவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், ஆளுநர் மாளிகையில் காவல் பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்