திமுக பேரணியில் 14,000 பேர் மீது வழக்குப்பதிவு

Default Image
  • குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பில் பேரணி நடைபெற்றது.
  • பேரணி தொடர்பான வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.  

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி  நடைபெற்றது. இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர்  திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இதன் பின்னர்  பேரணி நடத்திய தொடர்பாக மு.க.ஸ்டாலின்  உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.பேரணியில் சட்டவிரோத கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை மதிக்காதது, உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் திமுக பேரணி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடைபெற்றது.இந்த விசாரணையில்,பேரணியில் பதிவு செய்யப்பட்ட விடீயோக்களை போலீசார் தாக்கல் செய்தனர்.இந்த பேரணியில் தடையை மீறி பங்கேற்ற 14000 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.இறுதியாக இது தொடர்பான வழக்கினை முடித்து வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்