கோவையில் பெண் மீது ஆசிட் வீசிய மர்மநபர்கள்..!

Default Image

கோவையில் பெண் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசிய நிலையில், படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதி. 

கோவை அம்மன் குளம் பகுதியை சேர்ந்த 34 வயது பெண் ராதா. தருமபுரியை சேர்ந்த இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ராதா மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசி விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இந்த ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த ராதா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண்ணொருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்