திரையரங்குகளில் ஐ.பி.எல் போட்டிகள் ஒளிப்பரப்ப செய்வது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்.!

Default Image

திரையரங்குகளில் ஐ.பி.எல் போட்டிகள் ஒளிப்பரப்ப செய்ய தற்போதைக்கு வாய்ப்பு இல்லை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில்செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தற்போது திரையரங்கு திறப்பது குறித்து முடிவு செய்யவில்லை. இந்நிலையில்,  ஐபிஎல் ஒளிப்பரப்புவது பற்றி பேசுவது சரியாக இருக்காது. மேலும், சமூக இடைவெளியுடன் இருப்பதற்கு மட்டுமே தளர்வு அளிக்கபட்டுள்ளது.

அந்த வகையில், மத்திய அரசு கடந்த 8ந்தேதி காணொலி காட்சி மூலமாக திரையரங்கு உரிமையாளர்களிடம் திரையரங்கு திறப்பது பற்றி ஆலோசனை நடத்தியது. திரையரங்கு திறப்பது பற்றி மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கியது. தற்போதுள்ள நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னரே அரசு திரையரங்கு திறப்பது பற்றி முடிவு செய்யும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்