காதல் விவகாரம்: காதலித்தவர் தம்பி கொலை…. காரணம் என்ன…?

Default Image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் வசித்து வந்தவர் சாந்த குமார் இவர் தனது வீட்டிலிருந்து கடைக்கு செல்வதற்காக வெளியவந்துள்ளார்,  அப்பொழுது திடீரெனெ சில மர்மநபர்கள் சந்தகுமாரை மறைத்து கத்தியை வைத்து குத்தி கொலை செய்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர், விசாரணையில் இந்த கொலை சம்பவம் காதல் விவகாரத்தை கொண்டது என தெரியவந்தது, திருவதிகை பகுதியை சேர்ந்தவர் ஞானவேல், இவரது தங்கை அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

மேலும் கொலை செய்யப்பட்ட சாந்தகுமார் அண்ணன் சக்திவேல் என்பவர், ஞானவேல் தங்கையை காதலித்து தனிமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் பின்னர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து புகாரின் பேரில் சக்திவேல் பாலியல் வழக்கில் சிறையில் உள்ளார், மேலும் தங்கை வாழ்கை இப்படி சென்றதால் ஆத்திரம் கொண்ட ஞானவேல் தனது நபர்களை அழைத்து சென்று சக்திவேல் தம்பி சந்தகுமாரை கொலை செய்ததாக கூறப்படுகிறது, மேலும் இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து ஞானவேல் உட்பட ஆறுபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்