உள்ளாட்சி தேர்தல் தேதி மே மாதம் வெளியாகும்….மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வரும் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இது தொடர்பான அறிக்கையை 28-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.