அவசர அவசரமாக காவிரி டெல்டா வயல்களில் எரிவாயு குழாய்கள்! டிடிவி. தினகரன் கண்டனம்!

Default Image

காவிரி டெல்டா விவசாய பகுதிகளில் கெயில் நிறுவனம் எரிவாயு எடுப்பதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தி அவசர அவசரமாக அதற்காக குழாய் பாதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனை குறித்து அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் கூறுகையில், ‘ காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணியில் தீவிரம் காட்டிவருவது கண்டனத்திற்கு உரியது.’ என குறிப்பிட்டார்.

மேலும், ‘விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அவசர அவசரமாக எரிவாயு குழாய் அமைக்க என்ன அவசியம் இருக்கிறது?’ எனவும் கேள்வி எழுப்பினார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்