கரூர் பெருந்துயரம்....விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்ற த.வெ.க தலைவர் விஜய்!

கரூர் பெருந்துயரம் குறித்த விசாரணைக்கு டெல்லி CBI அலுவலகத்தில் விஜய் ஆஜராவதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

tvk vijay in delhi

டெல்லி :கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஜனவரி 12) டெல்லி சென்றுள்ளார். காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட விஜய், காலை 11 மணிக்கு டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். இது கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணையில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

விஜய் டெல்லி சென்றடைந்த நிலையில், சிபிஐ அலுவலகத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் வருகை மற்றும் அவரது ரசிகர்கள் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ அலுவலகத்திற்கு விஜய் வருகை தரும் நேரத்தில், அலுவலக வளாகத்தைச் சுற்றி காவல்துறையினர் மற்றும் CRPF வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளனர். விஜய்யின் ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினர் அதிக அளவில் கூடுவதால், அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது சிபிஐ விசாரணைக்கு வரும் முக்கிய நபர்களுக்கு அளிக்கப்படும் உயர்மட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், விஜய் மீது சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு ஆஜரான விஜய், சிபிஐ அதிகாரிகளிடம் விரிவான விளக்கம் அளிக்க உள்ளார். விசாரணைக்குப் பிறகு அவரது வாக்குமூலம் மற்றும் ஆய்வு முடிவுகள் மூலம் உண்மை நிலவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.