ஜெயராஜ், பென்னிஸ் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது- சிபிஐ!

தந்தை-மகன் கொலை வழக்கில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது சாத்தான்குளம் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர் என சிபிஐ மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உட்பட 10 போலீசாரை கைது செய்தனர்.
இந்நிலையில் ஆய்வாளர் ஸ்ரீதர், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிபிஐ தரப்பில் வாதங்கள் நடந்தது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிஸ் மீது பொய் வழக்கு பதியப்பட்டிருக்காது என தெரிவித்தனர்.
மேலும், பொறுப்பு அதிகாரி என்கிற வகையில் ஸ்ரீதருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது எனவும், இதன்காரணமாக அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என உரையாடினார்கள். மேலும், இந்த ஜாமீன் மனு மீதான வழக்கை வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025