ஜெயலலிதா நினைவிடம்: சிறப்பு அதிகாரியை நியமித்த தமிழக அரசு.!

Default Image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க கடந்த 2018ம் தமிழக அரசு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து, அதே ஆண்டு மே மாதத்தில் கட்டுமான பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், நினைவு மண்டபத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் டிஜிட்டல் வீடியோ காட்சி வைக்க ரூ.11.84 கோடியில் பணி நடந்து வருகிறது. இந்த நினைவிடம் ஒரு பறவை போன்ற அமைப்பில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணியை 2 மாதங்களுக்குள் முடித்து, ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி நினைவிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை கண்காணிக்க பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பாண்டியராஜனை சிறப்பு அதிகாரியாக நியமித்தது தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்