ஜெ.தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு- தனி நீதிபதி விசாரிப்பார் என்று அறிவிப்பு

Default Image

வேதா இல்லம் கையகப்படுத்தியதை நிறுத்தக் கோரும் வழக்கினை ஜெ.தீபா, தீபக் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்தார்.இதனை தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்தது.நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இதனிடையே , வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது .எனவே ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ. 67,90,52,033 டெபாசிட் செய்தது.

இதனையடுத்து நினைவு இல்லமாக மாற்ற அரசு இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு அரசுடைமையானது என்று தமிழக அரசு அறிவித்தது. உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது. நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதலமைச்சர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் நினைவு இல்லத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இதனிடையே தான் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிராக ஜெ.தீபா,ஜெ. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள்  தாக்கல் செய்தனர். ஜெயலலிதா அறக்கட்டளை தொடர்பான வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதால், தீபா ,தீபக் தொடர்ந்த வழக்குகளையும் அந்த அமர்விலேயே பட்டியலிடும்படி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரிந்துரை செய்தார்.இதனிடையே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது  ஜெயலலிதா அறக்கட்டளை தொடர்பான வழக்கினை விசாரிப்பதாக நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு தெரிவித்து வழக்கினை ஒத்திவைத்தனர். மேலும்  தீபா, தீபக் ஆகியோரின் வழக்குகளை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்