தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் – மத்திய அரசுக்கு கே.பி.அன்பழகன் கடிதம்.!

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என மத்திய கல்வி அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் இருமொழி கொள்கையை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பொது நுழைவுத்தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது என்றும் இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதால் அதனை தொடர முடிவு செய்துள்ளதாக எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர்கள் மாநாடு நடைபெறும் நிலையில், மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் புதிய கல்விக்கொள்கையில் உள்ள நுழைவுத்தேர்வு, கிராமபுரத்தில் பயிலும் மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.