இனி குழந்தை ஆபாச படம் செல்போனில் இருந்தாலே நடவடிக்கை .! ஏ.டி.ஜி.பி ரவி.!

Default Image

சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியானது. அதில் அதிகமாக ஆபாச படம் பார்த்தவர்களில் இந்திய அளவில் தமிழ்நாடு சென்னை முதலிடம் பிடித்து இருந்தது. அதிலும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வீடியோ பார்ப்பவர்கள் அதிகம் என கூறப்பட்டது. இந்த செய்தி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு  ஆபாச வீடியோக்கள் தான் காரணம் என்பதால் வீடியோக்கள் பார்ப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கூறப்பட்டது.

மேலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்களில் லிஸ்டை காவல்துறை தயார் செய்தது. அந்த லிஸ்டில் இருந்து திருச்சியை சார்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டது.

ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏ.டி.ஜி.பி ரவி இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது போக்ஸோ சட்டத்தில் திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி குழந்தை ஆபாச படத்தை செல்போனில் இருந்தாலே நடவடிக்கை என கூறினார். ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்