அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு.!

Default Image
  • அரசுப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா, அனைத்துத்துறை முதன்மை செயலாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் இனி அரசுப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார்.மேலும் அதில் குறிப்பாக பெரும்பாலான அரசு அலுவலர்கள், பணிநேரத்தின்போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் தொடந்து வருவதாக தெரிவித்தார்.

இதுபோன்று புகார்கள் வருவதால், அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். மேலும்  அடையாள அட்டை அணிவது தொடர்பாக, துறை செயலாளர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்