தூத்துக்குடியில் சற்று நேரத்தில் தொடங்க உள்ள மனித சங்கிலி போராட்டம் .!

Default Image
  • சமீபகாலமாக மத்திய அரசின் குடியுரிமை சட்டம் , தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
  • இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 2000 பேர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளன.

சமீபகாலமாக மத்திய அரசின் குடியுரிமை சட்டம் , தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இந்த திருத்த சட்டத்துக்கு எதிராக சில இடங்களில் நடைபெற்ற போராட்டங்கள் கலவரமாக மாறியது. தொடர்ந்து  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளும் , சில மாணவர் அமைப்புகளும்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  இன்று தமிழகத்தில் பல இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை ,கோவை ,கடலூர் போன்ற மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.இதை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் மத்திய அரசின் குடியுரிமை சட்டம் , தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 2000 பேர்  மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளன.

இந்த போராட்டத்தில்  திமுக , காங்கிரஸ் , மதிமுக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சியினர் இணைந்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.சமீபத்தில் கேரளாவில் 620 கிலோ மீட்டரில்  சுமார் 70 லட்சம் பேர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்