குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்…! எங்கு தெரியுமா…?

வட்டகானல் பகுதிக்கு குதிரைகள் மேல் வைத்து கட்டி, மின்னணு இயந்திரங்கள், அழியாத மை மற்றும் பல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலை வசதியில்லாத வெள்ளக்கவி என்ற பகுதி உள்ளது. வட்டகானல் பகுதியில் இருந்து, அடர்ந்த வனப்பகுதி வழியாக ஒற்றையடிப் பாதையில் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று இந்த கிராமத்தை அடைய வேண்டும்.

இதனையடுத்து, இந்த கிராமத்திற்கு இன்று காலை மின்னணு வாக்குப்பதிவு, இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கிராமத்தில், 290 வாக்காளர்கள் உள்ளார்கள். வட்டகானல் பகுதி வரை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, பின் அங்கிருந்து குதிரைகள் மேல் வைத்து கட்டி, மின்னணு இயந்திரங்கள், அழியாத மை மற்றும் பல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்