கனமழை எச்சரிக்கை… நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 28 ம் தேதி விடுமுறை

tn school leave rain

சென்னை :  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாகை, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றைய தினமே இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அறிவிப்பின் படி மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த மழையின் காரணமாக நேற்றைய தினமே இன்று நாகை மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து,  தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் நாளையும் (28-ஆம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 

மேலும், புயலின் எதிரொலி காரணமாக நாளை நாகை மாவட்டத்தில் கனமழைக்கு  வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk
anbumani sekar babu