குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு – 20-க்கும் மேற்பட்டோர் தலைமறைவு ?

Default Image

குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக தலைமைச்செயலக அதிகாரி உட்பட அரசு ஊழியர்கள்  20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிஎன்பிசி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

நடைபெற்ற விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி குரூப் 4 மற்றும் குரூப்- 2ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.எனவே காவலர் சித்தாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.மேலும் சித்தாண்டி மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாக தொடர்ந்து 10 பேரிடம்  விசாரணை நடத்தி வரும் நிலையில்  தேர்வில் வெற்றிபெற்று தற்போது அரசுப்பணியில் உள்ள 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan