பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை...நாளை கரூர் வருகிறார் முதலமைச்சர் விஜய்!

கரூரில் அமையும் 'Evervan Kothari Footwear Pvt. Ltd.' நிறுவனத்தின் ரூ.1,700 கோடி மதிப்பிலான புதிய தொழிற்சாலைக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார்.

Hero Image

சென்னை : தமிழக முதலமைச்சர் விஜய், நாளை (ஜூலை 10, 2026) பல்வேறு அரசுத் திட்டங்களைச் தொடங்கி வைப்பதற்காகக் கரூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இந்த வருகையின் ஒரு பகுதியாக, தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக மிகப் பெரிய முதலீட்டுத் திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

கரூரில் அமைக்கப்பட உள்ள 'Evervan Kothari Footwear Pvt. Ltd.' நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்காக, சுமார் ரூ.1,700 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்தத் தொழிற்சாலை அமையும் பட்சத்தில், அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 13,500 இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறுவது, மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பிரத்யேக அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார். இந்த விழாவில், மிகவும் முக்கிய நிகழ்வாகக் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக, கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை அவர் வழங்குகிறார்.

அந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தைச் சேர்ந்த 32 தகுதியுள்ள நபர்களுக்கு, அரசுத் துறைகளில் பணிபுரியும் வகையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் நேரடியாக வழங்க உள்ளார். இந்தச் செயல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் அளிக்கும் மிகப்பெரிய கைகொடுப்பாகவும், ஆறுதலாகவும் பார்க்கப்படுகிறது.

முதலமைச்சரின் இந்த வருகை, கரூர் மாவட்ட மக்களுக்குத் தொழில் வாய்ப்பையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் விதமாக அமையும் என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பாக இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை...நாளை கரூர் வருகிறார் முதலமைச்சர் விஜய்!