அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து – சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழப்பு

Five persons were killed when a government bus collided head-on with a truck near Wattalakundu in Dindigul district.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அரசு பேருந்தும், வேணும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழப்பு.

திண்டுக்கல்லில் இருந்து தேனியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல் உசிலப்பட்டியில் இருந்து வத்தலக்குண்டை நோக்கி தனியார் நூற்பாலைக்கு சொந்தமான வேன் ஒன்று மில் தொழிளார்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரில் வந்த அரசு பேருந்தின் டையர் வெடித்ததால் அரசு பேருந்து மற்றும் மில் வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் வேன் ட்ரைவர், இரு பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொழிலார்கள் மற்றும் அரசு பேருந்தில் வந்த பயணிகள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து ஆய்வு செய்து வரும் காவல்துறை உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்தாக கூறப்படுகிறது.