பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு ! நவம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Default Image

பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை நவம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
தமிழக அரசின் சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல் . கடந்த ஒய்வு பெற்ற இவர் நீதிமன்ற உத்தரவு மூலம் சிலை கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் பணியில் இருந்த காலத்தில் தமிழக கோவில்களில் காணாமல் போன ஏராளமான சிலைகள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிலைகள் காணாமல் போன வழக்குகள் விசாரணை நடந்து தொடர்ந்து வருகிறது.
சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசிற்கு எதிராக  பொன்.மாணிக்கவேல்,  அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்க தொடர்பான விசாரணை நடைபெற்றது.அதில்,  சிலைக்கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.மேலும் வழக்கின் விசாரணையை நவம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்