தெலுங்கானா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..!

Chandrasekara rao

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ்  அவர்கள் தனது வீட்டில் தவறி விழுந்துள்ளார்.  விழுந்ததில் அவருக்கு இடுப்பு எழுப்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கே சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி வெற்றியை எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் வெற்றி கனியை பறித்தது.

தேர்தல் வெற்றி.! மத்திய அமைச்சர்கள் ராஜினாமா.! அமைச்சரவையில் திடீர் மாற்றம்.! 

119 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றி பெற்றது.  தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்து கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மாநிலத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி நேற்று பதவியேற்றார். அவருடன் இணைந்து 12 அமைச்சர்கள் ரேவந்த் ரெட்டியுடன் பதவியேற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்