காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…! முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசிய விவசாயிகள்…!

Default Image

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனை அடுத்து, தமிழக அரசு, கர்நாடக அரசின் முயற்சிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறது.

மேலும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கும்பகோணம் மேலாகாவிரி ஆற்றுப் பாலம் அருகே விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி கர்நாடக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது,முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை ஆற்றில் வீசி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்