திருவாரூர்: வெடி கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து!

Fire Accident

வெடிக்கடையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்துகுலனத்தில் அந்த பகுதி சற்று பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள வெடிக்கடை ஒன்றில் விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் தகவல் அறிந்து  வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட குடவாசல் சாலையில், அருகருகே 50க்கும் மேற்பட்ட வெடிக்கடைகள் உள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், கடையில் யாரேனும் வேலை செய்து வந்தார்களா? யாருக்கும் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டிருகிறதா என்பது குறித்த தகவல் இன்னும் கெடக்கவில்லை. ஆனால், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

ஏற்கனவே, தமிழக, கர்நாடக எல்லையான ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கடையில் ஏற்பட்ட தீ மளமளவென பரவிய நிலையில், அருகில் இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசமானது. இந்த பட்டாசு கடையில் 20 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

9 மாவட்டங்களில் இன்று கனமழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 15 பேர் உட்பட மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் நடைபெற்ற மிக்பெரிய விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படும், இந்த விபத்து தமிழகத்தை உலுக்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்