வாகன ஓட்டிகளே ஜாக்கிரதை..! ரூ.1.36 கோடி அபராதம் வசூல்..!

Default Image

சென்னையில், கடந்த ஒன்றரை மாதங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.1.36 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னையில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில், சென்னையில், கடந்த ஒன்றரை மாதங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.1.36 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சாலையில் ஹெல்மெட் அணியாத 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்