மாமியாருக்கு கொரோனா – பயத்தில் கிணற்றில் குதித்து மருமகள் தற்கொலை!

Default Image

மாமியாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், பயத்தில் கிணற்றில் குதித்து மருமகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதிலும் அதிகரித்து வந்தாலும் தற்பொழுது ஒவ்வொரு இடங்களில் அதன் தீவிரம் மற்றும் வீரியம் சற்று குறைந்து உள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் சிலர்  தங்களது உயிர் மீது ஆசை பட்டு, பயத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது முட்டாள்தனம் தான்.

ராசிபுரத்தில் அண்மையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனை மூலமாக உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா தொற்று இருப்பதால் தனது கணவருக்கும் இருக்குமோ என்ற அச்சத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் முட்டாள்தனமாகவும் உள்ளது. ஏனென்றால் கொரோனா தொற்று நோயாக இருந்தாலும் தற்கொலை செய்வதற்கு பதிலாக கொரோனாவுக்கு பலியாகி இறந்து விடலாம். ஒருவேளை இறக்காமலும் இருக்கலாம்.

இது,தெரியாமல் முன்னதாகவே தற்கொலை செய்து கொள்பவர்கள் கொரோனாவுக்கு பலியாகாதவர்களாக கூட இருக்கலாம். ஏனென்றால் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருகின்றனர். ஒரு சிலரே உயிரிழக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்