கொடுக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளவும் – தெற்கு ரயில்வே கோரிக்கை!

Default Image

தனித்தனியாக அழைக்க கொடுக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளவும் என தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது.

தலைநகர் சென்னையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் சென்னை முதல் திருவள்ளூருக்கு இடைப்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எந்தெந்த பகுதிகளுக்கு ரயில்கள் செல்லும், ரயில் போக்குவரத்திற்கான நேரம் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று அவசர உதவிக்கான ஹெல்ப்லைன் எண்கள் அறிவித்திருந்தது.

தற்போது இது தொடர்பாக தெற்கு ரயில்வே பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொரு தனிப்பட்ட கேள்விகளுக்கும் பதில் அளிப்பது எங்களுக்கு சாத்தியமில்லை என்பதால், கொடுக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைன் எண்களை பயன்படுத்துங்கள். ரயில் சேவைகளின் துல்லியமான நிலைகளை பெற்றுக்கொள்ளுங்கள். பல கேள்விகள் எழுகிறது. எனவே உங்கள் அன்பான ஒத்துழைப்பு எங்களுக்கு தாருங்கள். மீண்டும் சொல்கிறோம். உங்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஹெல்ப்லைன் எண்களை பயன்படுத்தி தகவல்களை அறிந்து கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student
Dharmendra Pradhan
next icc tournament
gold price