கோவை :11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

Default Image
  • கடந்த மாதம் 26-ம் தேதி பூங்கா ஒன்றில் 11-ம் வகுப்பு மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
  • கைது செய்யப்பட்ட 6 பேர்  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளனர். தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் 26-ம் தேதி கோவை கீரநாயக்கன் பாளையத்தில் உள்ள பூங்கா ஒன்றில் தனது காதலனுடன்  11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பேசி கொண்டு இருந்தபோது. அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த மாணவியின் காதலனை தாக்கி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.

அதில் ஒரு  நபர் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் , பிரகாஷ், கார்த்திகேயன் , நாராயணமூர்த்தி ஆகிய 4 பேரை முதல் கட்டமாக 28-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். அதில் மீதம் உள்ள இரண்டு பேரில்  முக்கிய குற்றவாளி மணிகண்டன் என்பவரை தேடி வந்த நிலையில் கடந்த 3-ம் தேதி கோவை மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதற்கிடையில் மற்றொரு குற்றவாளியான பப்ஸ் கார்த்திக்கையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும்  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.இதையெடுத்து  நேற்று மணிகண்டனையும் போலீசார் கைது செய்தனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்