கடலுக்குள் பதுக்கிய தங்க பிஸ்கெட்டுகளை கண்டுபிடித்த கடலோர காவல்படை.!

Default Image

ராமேஸ்வரம் அருகே கடலுக்குள் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்புடைய சுமார் 17 கிலோ தங்கம் கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே மண்டபம் மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த ஆஷிக் மற்றும் பாரூக்கும்  முயல்தீவு அருகே கடல்பகுதியில் இருந்தபோது இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கெட்டுகளை பொட்டலமாக கட்டி முயல் தீவு அருகே கடலுக்குள் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து நீச்சல் வீரர்கள் துணையுடன் தங்க பிஸ்கெட்டுகளை கண்டுபிடித்து கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 2 பேரையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
putin
Suriya
Pollachi Sexual Assault case
edappadi palanisamy rs bharathi
Supreme court - Senthil Balaji
suryakumar yadav vk orange cap