நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின் நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . சேலம் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் பிருந்தா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.