ரேஷன் அட்டைதாரரர்களுக்கு ஸ்பெஷல் தீபாவளி போனஸ்.! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு.!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி போனசாக, 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கான பணம் அவரவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி இன்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு தீபாவளி போனஸை அறிவித்துள்ளார். அதன்படி, தீபவளையை முன்னிட்டு, ரேஷன் ஆட்டைதாரகளுக்கு ரொக்க பணம் வங்கியில் செலுத்தப்பட உள்ளது.
பாப்ஸ்கோ சார்பில் தட்டாஞ்சாவடி பகுதியில் சிறப்பு அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. அதனை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கினார்
அந்த சிறப்பு அங்காடியில் 25 மளிகை பொருட்கள் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போது முதல்வர், ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி போனசாக 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கான பணம் அவரவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என அறிவித்துள்ளார்.