அரியர் மாணவர்கள் கவனத்திற்கு… சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய அறிவிப்பு.!
சென்னை பல்கலைக்கழகத்தில் அரியர் வைத்துள்ள பழைய மாணவர்கள் மீண்டும் செமஸ்டர் தேர்வு எழுத அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் தற்போது வெகு வருடங்களாக அரியர் வைத்துள்ள பழைய மாணவர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2015 – 2016 கல்வியாண்டிற்கு முந்தைய இளங்கலை மாணவர்களும், 2019-2020 கல்வியாண்டிற்கு முந்தைய முதுகலை பயின்றமாணவர்களும் வரும் நவம்பர் மற்றும் மார்ச் மாதம் செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது .
இதற்கான முழு அறிவிப்பும், விண்ணப்பிக்க தேவையான வழிகாட்டு நெறிமுறைகளும் சென்னை பல்கலைக்கழக அதிகாரபூர்வ தளத்திலோ, கல்லூரிகளிலோ தெரிந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.