சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு..!

Default Image

10-ஆம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கும்.10-ஆம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மாண்டஸ் புயலாக மட்டுமே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்