தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

Default Image

அந்தமான் பகுதியை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் லேசான மதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

நீலகிரி, தேனி, கோவை, சேலம், நாமக்கல், திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
ADMK
GoodBadUgly
digital scams old women
DMK MPs protest at Delhi Parliament
cm mk stalin
impact player rule in ipl