#Budget Live : தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல்-நிர்மலா சீதாராமன்

Default Image

தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  ஆதிச்சநல்லூரில்  கி.மு 1600 க்கு முற்பட்ட நாகரிகத்தோடு தொடர்புடையது. தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஊர்களில் முதன்மையானதாக உள்ளது. இங்கு புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் வழியாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.பின்னர் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.அப்பொழுது அவரது உரையில்,தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்லியல் சிறப்பு மிக்க தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்