#BREAKING: கல்லூரியில் மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்க உத்தரவு – கல்லூரிக் கல்வி இயக்ககம்

The Directorate of College Education has ordered to start the process of student admission in government arts and science colleges.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. கலந்தாய்வை ஆக.23-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தரவரிசை பட்டியலின்படி, ஆன்லைன் அல்லது நேரடியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை தொடங்க என்றும் 12ம் வகுப்பு சான்றிதழ், இதர சான்றிதழை சமர்ப்பித்த பின்னரே சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் எனவும் அணையிட்டுள்ளது. மேலும், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டையும் பின்பற்ற கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.