#Breaking: வேலூர் சிறையில் இருந்து நளினி விடுதலை!

Default Image

வேலூர் பெண்கள் தனிசிறையில் இருந்து விடுதலையானார் நளினி.

பரோலை ரத்து செய்யக்கோரி வேலூர் மத்திய சிறை நிர்வாகத்திடம் நளினி கடிதம் அளித்த நிலையில், தற்போது விடுதலையானார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து சிறை நிர்வாகத்திடம் கடிதம் அளித்தார் நளினி. கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு பின் தனிசிறையில் இருந்து விடுதலையானார் நளினி.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேர் நன்னடத்தை, சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறை, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் விடுதலை செய்ய நேற்று உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியிருந்தது.

இந்த சமயத்தில் நளினி விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் இதனால் பரோலில் உள்ள நளினி இன்று விடுதலையாக வாய்ப்பு இல்லை எனவும் வேலூர் மத்திய சிறை தெரிவித்திருந்த நிலையில், தீர்ப்பின் நகல் கிடைக்கப்பெற்ற பின் விடுதலை செய்யப்பட்டார். மேலும், நளினியுடன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரும் விடுதலையானார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்