#BREAKING: கோடநாடு கணினி ஆப்ரேட்டர் மரணம் – தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை!

Private police plan to re-investigate the death of computer operator Dinesh Kumar at Kodanad estate.

கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டம்.

கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக இருந்த தினேஷ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் மரணம் தொடர்பாக காவல்துறை மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏடிஜிபி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், இந்த சம்பவம் தொடர்பாக ஜாமீனில் உள்ள குற்றவாளிகள் என கருதப்படும் அனைத்து பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2017ல் இறந்த தினேஷ்குமார் மரணம் குறித்து தனிப்படை போலீசார் மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கோடநாடு சம்பவத்தை தொடர்ந்து கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் தற்கொலை செய்ததாக முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற்று கோடநாடு எஸ்டேட் கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் தற்கொலை தொடர்பாக மீண்டும் விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.