#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு – சற்று நேரத்தில் தீர்ப்பு

Default Image

தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம். சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது மதுரை சிறப்பு நீதிமன்றம். கடந்த 2015 ஜூன் 23ம் தேதி நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், கோகுல்ராஜ் மீட்கப்பட்டார்.

இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக 116 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.  இறுதி விசாரணை பிப்.9ல் முடிந்த நிலையில், இன்று சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம். கடந்த 2019 மே 5 முதல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen