#BREAKING: தேர்தல் ரத்து – விளக்கம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையம்!

Default Image

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர். இதில் சில இடங்களில் வேட்பாளர் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், சில இடங்களில் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் ரத்தான நிலையில், இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம். தேர்தல் ரத்தானதுக்கு  உரிய காரணத்தை மாவட்ட ஆட்சியர்கள் அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கும் விளக்கத்தை பெற்று, ஒத்திவைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மறைமுக தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்