#BREAKING : சம்மன் கொடுக்க சென்ற சிபிசிஐடி…! தப்பியோடிய சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியர்கள்..!

Default Image

சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது, சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் 5 பேர் தப்பியோட்டம்.

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிவசங்கர் பாபா கைதான நிலையில், சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க உடந்தையாக இருந்த ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

அதன்படி, வரும் திங்கள்கிழமை முதல் பள்ளி ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி,  சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது, சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் காயத்ரி, பிரவீனா உள்ளிட்ட 5 ஆசிரியைகள் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து, கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகள் 5 பேரின் வீடுகளில் சிபிசிஐடி சம்மன் ஒட்டியுள்ளது. மேலும், சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து தப்பியோடி தலைமறைவாக உள்ள ஆசிரியர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்