#BREAKING: ஆவின் இனிப்புகள் விலை உயர்வு இன்று முதல் அமல்!

Default Image

ஆவின் நிறுவனத்தின் மேலும் சில பொருட்களின் விலை உயர்வு என அறிவிப்பு.

ஆவின் பால் பொருட்களின் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஆவின் இனிப்பு வகை பொருட்களின் விலையை உயர்த்தி, இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரசகுலா, குலாப் ஜாமுன் உள்ளிட்ட 17 இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தியுள்ளது ஆவின் நிறுவனம். ரூ.20 முதல் ரூ.80 வரை இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பால், தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டது.

இதுகுறித்தும் பல்வேறு அரசியல் கட்சிகள், கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், ஆவின் நிறுவனத்தின் மேலும் சில பொருட்களின் விலை உயர்த்தி, இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குலாப் ஜாமுன் 125 கிராம் 5 ரூபாய் உயர்ந்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மைசூர்பா அரை கிலோ 230 ரூபாயில் இருந்து 270 ரூபாயாகவும், பால்கோவா 100 கிராம் 47 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

AavinTN

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்