நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தனுக்கு ஜாமீன்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மதுரை சிறையில் இருக்கும் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மதுரையில் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த போது நந்தினி மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தாகவும், அவர்களை தாக்கியதாகவும் நந்தினி மீது வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கை மாவட்டம் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த 27 ம் தேதி நீதிபதி சாமுண்டீஸ்வரி முன்னாள் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை சார்பில் சாட்சிகள் ஆதாரம் என்று கூறி நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.இதனால் நந்தினி மற்றும் அவரது தந்தை மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்
மேலும் இந்த வழக்கு விசாரணை மீண்டும் வரும் 9 ம் தேதி(இன்று ) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் நந்தினிக்கு ஜூலை 5-ஆம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரும், அவரது தந்தையும் சிறையில் இருந்ததால் திருமணம் தேதி மாற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சாமுண்டீஸ்வரி , இன்றைய விசாரணையில் நந்தினி, அவரது தந்தை ஆனந்தனுக்கு சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)