அயனாவரம் சிறுமி வழக்கு : மேலும் இரண்டு பேர் மேல்முறையீடு

Default Image

அயனாவரம் சிறுமி வழக்கில் மேலும் இரண்டு பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். 

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில்  7ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சென்னை போக்ஸோ நீதிமன்றம்,5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 9 பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.

தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் உமாபதி என்பவர் 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.இந்நிலையில்,ஜெயராமன் மற்றும்   தீனதயாளன் என்ற குற்றவாளிகள் 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அயனாவரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
digital scams old women
DMK MPs protest at Delhi Parliament
cm mk stalin
impact player rule in ipl
velmurugan mla
TN CM MK Stalin - TVK Leader Velmurugan