மக்களே கவனம்! தமிழகத்துக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!

rain tamilnadu

வானிலை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று  (ஜூலை 18) தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.

ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூலை 19 உருவாக வாய்ப்புள்ளது.இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 12 – 20 செமீ மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும், இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

அதே சமயம், இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது.கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26- 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்