பள்ளத்தில் விழுந்த அதிமுக தொண்டர்கள்.!

Default Image

மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள ரவுண்டானாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கபடி விளையாட்டு வீரர்களின் கற்சிலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான இடத்தை ஆய்வு செய்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரையின் நுழைவுவாயிலாக இருக்கக்கூடிய முக்கியமான சந்திப்புகளில் தொன்மை வாய்ந்த பழமையான சின்னங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் கபடி வீரர்கள் அதிகம் உள்ள செல்லூர் பகுதியில் கபடி வீரர்களின் சிலை அமைப்பதில் பெருமை அடைகிறோம் என தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது அங்கு கூடிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரவுண்டானா மீது நின்று கொண்டிருந்தன. அப்போது திடீரென ரவுண்டானா மேற்பகுதியில் அமைக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் உடைந்து பூமிக்குள் சென்றது. இதனால் செல்லூர் ராஜூவை சுற்றிருந்த அதிமுக தொண்டர்கள் சிலர் திடீரென பள்ளத்தில் விழுந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை பத்திரமாக கைகளை பிடித்து மேலே மீட்டனர். இதனால் அந்நிகழ்ச்சியில் சற்று பரபரப்பாக காணப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்