அதானி குழுமம் : ரூ.42,000 கோடி முதலீடு..10,000 பேருக்கு வேலை வாய்ப்பு..!

உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு இலக்கு நிர்ணயம் செய்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்றும் , இன்றும் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை ரூ. 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ரூ.42.768 கோடியை முதலீடு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. இதன் மூலம் 10,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. அதன்படி அதானி குழுமம் அதானி கிரீன்  எனர்ஜி  துறையில் ரூ.24, 500 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்துள்ளது.

இதன் மூலம் 5000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும், அதானி கனெக்ஸ் துறையில் 13,200 கோடி முதலீடு செய்துள்ளது, இதன் மூலம் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அதானி பசுமை எரிசக்தி துறையில் ரூ.1,568 கோடி முதலீடு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்