இன்று முதல் தமிழகத்தில் ஏ.சி பேருந்துகள் இயக்கம்…!

Default Image

இன்று முதல் தமிழகத்தில் அரசு போக்குவரத்தை சார்ந்த ஏ.சி பஸ்கள் இயக்கம்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 10 முதல் நிறுத்தப்பட்ட அரசு ஏ.சி பேருந்துகள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் அறிவித்திருந்தார். 

இதனையடுத்து, சென்னை மாநகரில் 48 குளிர்சாதன பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக 340 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏ.சி. பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முககவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு தான்  பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
donald trump harvard university
anil kumble Andre Russell
DMK senthil balaji
JDVance MEET PM MODI
Seeman
KKR VS GT