தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாமல், ஆளுநர் தாமதமின்றி உடனடியாக 7.5 சத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி , திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,அரசுப்பள்ளியில் படிக்கும் தமிழக மாணவர்கள் தனியார் பயிற்சியின்றி, நீட் தேர்வில் வெற்றிபெற்று உதவும் பொருட்டு, சட்டப்பேரவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றியது. நிறைவேற்றி 40 நாட்கள் கடந்தபின்னும் ஆளுநர் அனுமதியளிக்காமல் தாமதப்படுத்துவதை கண்டித்து கழகத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாமல், ஆளுநர் தாமதமின்றி உடனடியாக 7.5 சத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
unknown node