சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நிறைவு பெற்றது. இதன், 2வது கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தொகுத்து வழங்கினார். இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் […]
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தொகுதி மறுவரையறை குறித்து வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து கொண்டு சென்றனர். மக்களவையில் இதுகுறித்து விவாதம் நடத்த தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், தொடர் அமளி […]
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு எதிர்த்து வருகிறது. இந்த சூழலில், தமிழ் திரைப்படங்களை இந்தியில் ஏன் டப்பிங் செய்ய வேண்டும்? என ஹிந்தி மொழிக்கு ஆதரவாக ஆந்திரா துணை முதல்வர் பவான் கல்யாண் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது. பவான் கல்யாண், நேற்று ஜனசேனா கட்சியின் நிறுவன நாள் நிகழ்ச்சியில் பேசும் போது, “தனது கட்சி விழாவில் தமிழ், கன்னடம், மராத்தி, ஹிந்தி […]
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேசியது தற்போது பேசுபொருளாகி உள்ளது மட்டுமின்றி திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பபை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு யூ-டர்ன் : இன்று கேள்வி பதில் நேரத்தில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ” முதலில் PM Shri திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு, கடைசி நேரத்தில் யூ- டர்ன் […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட் உரை மீதான தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ள நிலையில், திமுக சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தனது கருத்துக்களை பதிவு செய்தார். அவர் பேசுகையில், ” மத்திய அரசும் மாநில அரசும் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் உத்திர பிரதேச […]
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பாஜக சார்பில் குஷ்பூ உள்ளிட்டோர் மதுரையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி, போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது அவர்களை ஆடுகள் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் அடைத்து வைத்ததாக குற்றசாட்டும் எழுந்தது. பாலியல் சம்பவம் தொடர்பாக பேசிய பாஜக பிரமுகர் குஷ்பூ, திமுக எம்பி கனிமொழி ஏன் இது பற்றி பேசவில்லை. […]
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உட்பட 850க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக செயற்குழுவில், முதல் தீர்மானமாக அண்ணல் அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் அவமதித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், புயல் வெள்ள நிவாரணமாக ரூ.2,000 கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு […]
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால், திருவண்ணாமலை தீப மலை அடிவார பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலச்சரிவில், கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா என 4 குழந்தைகள் மற்றும் ராஜ்குமார்-மீனா தம்பதி என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். தற்பொழுது, மண்சரிவில் சிக்கிய ஒவ்வொருவரின் உடல்களாக மீட்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள இருவரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். ஃபெஞ்சல் புயல் […]
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் அரசியல் தலைவர்கள் முதல் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் என்பது நாள்தோறும் தொடர்கதையாகி கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் நடவடிக்கைகளை கடுமையாக்கவும், அதன் மீதான விசாரணையை துரிதப்படுத்தவேண்டிய சூழல் நிலவுகிறது. இதனை Global […]
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வார செவ்வாய் அன்று மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் தாக்கல் செய்தார் . அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். திமுக எம்பி கனிமொழி இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் பற்றி தனது கருத்தை எடுத்துரைத்தார். அதில், மத்திய அரசு கல்விக்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை என […]
Election2024 : நடைப்பயிற்சி முடித்துக்கொண்டு தூத்துக்குடி காய்கறி சந்தையில் திமுகவுக்கு வாக்கு சேகரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் கிட்டத்தட்ட 25 நாட்களே உள்ள நிலையில் நாளை (மார்ச் 27ஆம்) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் […]
Kanimozhi: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விதிமீறல்கள் பல இருப்பதால் தான் அரசு மற்றும் உயர்நீதிமன்றம் உரிய முடிவு எடுத்துள்ளது என்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில […]
DMK MP Kanimozhi – பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்து இருந்தார். நேற்று திருப்பூர் பல்லடத்தில் பாஜக பொதுக்கூட்டம், மதுரையில் சிறு குறு தொழில் முனைவோர்களின் கருத்தரங்கம் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் என நேற்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி, நெல்லை வந்திருந்தார். இதில் , தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க […]
2024க்கான பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதன் பொருட்டு திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டது முதற்கட்டமாக தூத்துக்குடி சென்று கருத்துக்களை இந்த குழு சேகரித்தது. இரண்டாம் நாளாக நேற்றும் கன்னியாகுமரியில் இந்த குழுச்சென்று அங்குள்ள பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டு அதை மனுக்களாக பெற்றது. இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்று மதுரையில் கனிமொழி […]
2024 கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால் திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையை தயாரிக்க, திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு முதற்கட்டமாக நேற்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி சென்றனர். அக்கூட்டத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் இருந்து மனுக்களை பெற்றனர். தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை மோடி பார்வையிடாதது ஏன்? – ஆ.ராசா […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயார் செய்வது உள்ளிட்டவைகள் தொடர்பான தேர்தல் பணிக்குழு அமைத்து அதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதில், திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்புக்குழு, தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் குறிப்பாக கனிமொழி எம்பி தலைமையில் […]
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், பல ஆண்டுகளாகவே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகத்தில் பல்வேறு சமயங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வந்த இந்த இயக்கத்தை நேற்று அரசியல் கட்சியாக பதிவு செய்து தனது கட்சி பெயரையும் அது குறித்த அறிக்கையும் நடிகர் விஜய் வெளியிட்டார். “தமிழக வெற்றி கழகம்” என பெயரிடப்பட்டுள்ள தங்கள் கட்சியை விஜய் தரப்பினர் நேற்று […]
இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக வடிவேலு, சிம்பு, இயக்குனர் பாரதி ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கவின், கமல்ஹாசன், உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் […]
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் அறிக்கை தயார் செய்வது, தேர்த பணிக்குழு அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான பணிகள் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில், சமீபத்தில், திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்புக்குழு, தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இதையடுத்து இன்று காலை மாநாட்டுத் திடலில் உள்ள கொடிமரத்தில் உள்ள கட்சிக் கொடியை திமுக எம்.பியும், துணை பொதுச் செயலாளருமான கனிமொழி ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் இளைஞரணி மாநாட்டில் கனிமொழி பேசுகையில், “பேரறிஞர் அண்ணா […]